நான் கவிதை எழுதத் துவங்கும் பொதெல்லாம் என் நினைவு உன்னிடமே செல்கிறது இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ எப்படி ரசிப்பாய் என்று........ நான் எழுதிய கிறுக்கல்கள் கவிதை என்று - உன்னைப் பார்த்த பின்தான் புரிந்தது எனக்கு....... எழுத்துக்களின் அழகு - உன் பெயரை எழுதும்போதுதான் தெரிந்தது எனக்கு........
 
மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும் கவிதைகள் நன்றாய்ப் புரிகி‎ன்றன எனக்கு........... உன்னைக் கண்ட நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம் தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!

No comments:

Post a Comment